×

குளச்சலில் கண்ணில் கருப்புத்துணி கட்டி லெனினிஸ்ட் போராட்டம்

குளச்சல், ஜூலை 26: ஒன்றியரசு நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டத்தை கைவிட கேட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்டு லெனினிஸ்ட் செங்கொடி சார்பில் குளச்சல் காமராஜர் பஸ் ஸ்டாண்டு எதிரே கண்ணில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் தனபால், பரமேஸ்வரன், சேதுமாதவன் தம்பி, முட்டம் வறீதையா, ஜார்ஜ் ஸ்டீபன், தங்கம், சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குளச்சலில் கண்ணில் கருப்புத்துணி கட்டி லெனினிஸ்ட் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Leninist ,Kulachal ,Kamarajar ,Marxist ,Union Government ,District Secretary ,Dinakaran ,
× RELATED ஆட்டோ டிரைவர் மாயம்