×

இம்ரான்கான் கட்சி அலுவலகத்திற்கு சீல்

இஸ்லாமாபாத்: பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பாகிஸ்தான் அரசு சீல் வைத்து உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைமை அலுவலகம் இஸ்லாமாபாத்தில் உள்ளது. அந்த கட்டிடம் இஸ்லாமாபாத் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கூறி கட்டிடத்தை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

The post இம்ரான்கான் கட்சி அலுவலகத்திற்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Imrankan Party ,Islamabad ,Pakistani government ,Pakistan ,Imrankan ,Dinakaran ,
× RELATED இஸ்லாமாபாத் செல்கிறாரா பிரதமர் மோடி?.....