×

பாங்காக்கில் சயனைட் கொடுத்து 6 பேர் கொலை

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சயனைட் விஷம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட 6 பேரில் நால்வர் வியட்நாம் நாட்டையும் இருவர் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. பாங்காக்கில் பிரபல கிராண்ட் ஹயத் ஓட்டல் அறையில் தங்கிய 6 பேரும் இறந்து கிடப்பதாக ஊழியர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் நடத்திய சோதனையில் 6 பேரும் அருந்திய தேநீர் கோப்பைகளில் சயனைட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் முதலீடு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் 6 பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். சயனைடை தேநீரில் கலந்து கொடுத்த நபரும் அதையே அருந்தி உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீஸ் கூறியுள்ளது.

The post பாங்காக்கில் சயனைட் கொடுத்து 6 பேர் கொலை appeared first on Dinakaran.

Tags : Bangkok ,Vietnam ,United States ,Grand Hyatt ,Cyanide ,Dinakaran ,
× RELATED Dating செல்ல விடுப்பு தரும் நிறுவனம்!