×

சூரக்கோட்டை கிளை நூலகத்தில் வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

வல்லம், ஜூலை 16: தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை கிளைநூலகத்தில் நூல் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தலின்படி தஞ்சாவூர் மாவட்ட நூலக அலுவலர் பா.முத்து செயல்முறைகளின்படி சூரக்கோட்டை ஊராட்சி கிளைநூலகத்தில் நூல் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் சூரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள், 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பெண்கள் என அனைவர் மத்தியிலும் நூல் வாசிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து கிராமத்தில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நூலகத்தில் உறுப்பினராக சேர்கிறோம் என தெரிவித்தனர். மேலும் தங்களது ஓய்வு நேரத்தை நூலகத்தில் நூல்கள் வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் உறுதியளித்தனர்.

The post சூரக்கோட்டை கிளை நூலகத்தில் வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Surakottai Branch Library ,Vallam ,Surakottai ,Thanjavur ,Thanjavur District ,Deepak Jacob ,Thanjavur District Library ,Officer ,Pa. Muthu ,Surakottai Panchayat Branch Library ,Dinakaran ,
× RELATED வல்லம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்