×

காரைக்குடி, கானாடுகாத்தான் பகுதிகளில் மின்தடை

 

காரைக்குடி, ஜூலை 16: காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணைமின் நிலையத்தில் வரும் 18ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஸ்ரீராம்நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகபட்டி, ஆவுடைபொய்கை, ஓ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

காரைக்குடி துணைமின்நிலையத்தில் வரும் 20ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங்போர்டு, செக்காலைகோட்டை, பாரிநகர், கல்லூரிசாலை, செக்காலைசாலை, புதிய, பழைய பஸ்ஸ்டாண்டு, கல்லுகட்டி, செஞ்சை, கோவிலூர் ரோடு, மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்தத் தகவலை செயற்பொறியாளர் லதாதேவி தெரிவித்துள்ளார்.

The post காரைக்குடி, கானாடுகாத்தான் பகுதிகளில் மின்தடை appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Kanadugathan ,Sriramnagar ,Kotayur ,Velangudi ,
× RELATED கொற்றவனுக்கு அருளிய கொற்றவாளீஸ்வரர்