×

திண்டுக்கல் அருகே மீன்பிடிக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி பலி

திண்டுக்கல், ஜூலை 9: திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு பூதிப்புரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (42). மீன் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு குடகனாறு ஆற்றில் மீன்பிடிக்க செல்வதாக மனைவி பச்சையம்மாளிடம் கூறிவிட்டு சென்றார். குடகனாறு ஆற்றில் வலை விரித்த பின் ஓய்வுக்காக அவரது அண்ணன் வீட்டில் தங்கி கொள்வது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று காலை குடகனாறு ஆற்றில் இறந்த நிலையில் மணிகண்டன் மிதந்து கிடந்தார். தகவலறிந்ததும் தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். மீன்பிடித்த போது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து மனைவி பச்சையம்மாள் புகாரில் எஸ்ஐ பூபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post திண்டுக்கல் அருகே மீன்பிடிக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Manikandan ,Dhadikkumbu Poothipuram ,Pachaiammal ,Kudakanar river ,Kudakanar ,Dinakaran ,
× RELATED பெண் கேட்டு வீட்டுக்கு சென்ற சென்னை டிரைவர் கொலை: காதலியின் தந்தை கைது