×

பெண் கேட்டு வீட்டுக்கு சென்ற சென்னை டிரைவர் கொலை: காதலியின் தந்தை கைது


வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோட்டையை சேர்ந்த பூப்பாண்டி மகன் கபிலன் (22). சென்னை துறைமுக டிரைவர். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் மகளுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் கபிலன், காதலிக்கும் பெண் அவருக்கு தங்கை முறை வேண்டும் என கூறப்படுகிறது. சென்னையில் இருந்து ஊருக்கு வந்த கபிலன் நேற்று முன்தினம் மாலை காதலியின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை மணிகண்டனிடம் பெண் கேட்டுள்ளார். அப்போது மணிகண்டன் தர முடியாது என மறுக்கவே, கபிலன் விடாமல் கட்டி தர வேண்டும் எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், கபிலனை அரிவாளால் வெட்டினார். மேலும் உறவினர்கள் பொன்ராம், பொன்னையாவும் கபிலனை கம்பால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த கபிலனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருவீடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் விருவீடு போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனர். தப்பிய பொன்ராம், பொன்னையாவை தேடி வருகின்றனர்.

The post பெண் கேட்டு வீட்டுக்கு சென்ற சென்னை டிரைவர் கொலை: காதலியின் தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Wattalakundu ,Bhopandi ,Kaplan ,Kunnuvarangkotaya ,Watalakundu, Dindigul district ,Port ,Manikandan ,
× RELATED தந்தையால் காதல் கணவர்...