×

உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு

காரைக்குடி, ஜூலை 7: காரைக்குடியில் கழனிவாசல், பாண்டியன் நகர் பகுதிகளில் உள்ள துரித உணவகங்களில் சாக்கோட்டை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். இதில் அதிக வண்ணம் சேர்க்கப்பட்ட கோழியிறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் பானிபூரி விற்பனை கடைகளில் பானிபூரி மீது ஊற்றப்படும் பச்சை மிளகாய், மல்லி கலந்த ரசத்தை சேகரித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை ஆய்வக பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். அதிகாரிகள் சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Kalanivasal ,Pandian Nagar ,Dinakaran ,
× RELATED கொற்றவனுக்கு அருளிய கொற்றவாளீஸ்வரர்