×

பஸ்சில் இருந்து தவறி விழுந்து மாணவர் காயம்

 

வத்திராயிருப்பு, ஜூலை 6: வத்திராயிருப்பு அருகே பஸ் படிக்கட்டில் பயணித்த மாணவர் தவறி விழுந்து காயமடைந்தார். வத்திராயிருப்பு அருகே தெற்கு கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் முகேஷ்குமார்(17). இவர் மகாராஜபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று காலை அரசு பஸ்சில் முகேஷ்குமார் பள்ளிக்கு சென்றார்.

மகாராஜபுரம் நிறுத்தத்தில் பஸ் நின்ற போது, படிக்கட்டிலிருந்த முகேஷ்குமார் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் விருதுநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post பஸ்சில் இருந்து தவறி விழுந்து மாணவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Vadrairpur ,Karupasamy ,Mukesh Kumar ,southern Kottaiur ,Vathirairuppu ,Maharajapuram Government High School ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் கைது