×

சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலரின் கணவர் கைது

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிகொல்லையைச் சேர்ந்தவர் தண்டபாணி(40). அதிமுகவை சேர்ந்த இவரது மனைவி ஆம்பூர் நகராட்சி கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் தண்டபாணி உள்ளிட்டோர், அதே பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக ஆம்பூர் டவுன் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்குசென்று சோதனையிட்டனர்.

அதில், தண்டபாணி உள்ளிட்டோர் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை சுற்றி வளைக்க முயன்றபோது 6 பேர் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்த 5 பைக்குகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட தண்டபாணியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர், வழக்குப்பதிந்து தண்டபாணியை கைது செய்தனர். தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

The post சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலரின் கணவர் கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Ampur ,Dandapani ,Kampikollai, Ampur, Tirupathur district ,Ambur ,Town police ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் தண்டபாணி...