×

பரோட்டா சாப்பிட்டு தூங்கிய எலக்ட்ரீசியன் திடீர் சாவு

தூத்துக்குடி, ஜூன் 7: தூத்துக்குடியில் பரோட்டா சாப்பிட்டு விட்டு இரவில் தூங்கிய எலக்ட்ரீசியன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் மணி(46). இவர், கடந்த 6 ஆண்டுகளாக தூத்துக்குடியில் தங்கியிருந்து தனியார் பஸ் நிறுவனத்தில் எலக்டீரீசியனாக வேலை பார்த்து வந்தார். கடந்த 3ம் தேதி பரோட்டா சாப்பிட்டு விட்டு இரவில் கம்பெனி ஓய்வறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பரோட்டா சாப்பிட்டு தூங்கிய எலக்ட்ரீசியன் திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Mani ,Melmalayanur ,Villupuram district ,Tuticorin ,
× RELATED தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் சரி செய்து தரப்படும்