×

குற்றால அருவியில் மாற்றுத்திறனாளியை பத்திரமாக குளிக்க வைத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

தென்காசி: கடும் கூட்ட நெரிசலிலும் மாற்றுத்திறனாளி நபரை பத்திரமாக குற்றால அருவியில் குளிக்க வைத்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். கோடை விடுமுறையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான குற்றாலத்தில் தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் போலீசார் 24 மணி நேரமும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க வந்திருந்த மாற்றுத்திறனாளி நபரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பத்திரமாக அழைத்து சென்று பாதுகாப்பான முறையில் அவர் அருவியில் குளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்து அவரை பத்திரமாக குளிக்க வைத்து அனுப்பினர். கடும் கூட்ட நெரிசலிலும் மாற்றுத்திறனாளி நபரை பத்திரமாக குளிக்க வைத்து அவருக்கு உறுதுணையாக இருந்த தென்காசி மாவட்ட காவல்துறையினரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.

 

The post குற்றால அருவியில் மாற்றுத்திறனாளியை பத்திரமாக குளிக்க வைத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : TENKASSI ,Kulala ,Tenkasi ,Dinakaran ,
× RELATED தென்காசியில் தபால் வாக்கு...