×

மகன் கண்முன் தந்தை பரிதாப சாவு

திருமங்கலம், ஜூன் 5: மகன் கண்முன் தந்தை வாகனம் மோதி உயிரிழந்தார். திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் ராஜாங்கம்(58). முன்னாள் ராணுவவீரர். இவரது மகன் சின்னபாண்டி(26). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்கு சின்னபாண்டி ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் தந்தை ராஜாங்கம் மற்றும் மகன் சின்னபாண்டி இருவரும் திருமங்கலத்தில் கோயிலுக்கு சென்றுவிட்டு மதுரை – விருதுநகர் நான்குவழிச்சாலையை உசிலம்பட்டி சந்திப்பு பகுதியில் கடந்தனர். அப்போது விருதுநகரிலிருந்து மதுரை நோக்கி சென்ற மினிவேன் முன்னால் நடந்து சென்ற ராஜாங்கம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கிவீசப்பட்ட ராஜாங்கம் மகன் சின்னபாண்டி கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் ராஜாங்கத்தின் உடலை மீட்டு திருமங்கலம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மகன் கண்முன் தந்தை பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Rajangam ,Chathangudi ,Chinnapandi ,
× RELATED குளிக்கும்போது வீடியோ எடுத்து...