×

பெண் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது

 

பல்லடம், ஜூன் 1: பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி ஜோதிமணி (35). இவரது குடும்பத்தாருக்கும், அருகில் வசிக்கும் சின்னான் குடும்பத்தாருக்கும் இடையே கழிவுநீர் கால்வாய் செல்வது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. நேற்று அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜோதிமணியை, சின்னான் குடும்பத்தார் கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஜோதிமணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தாக்கிய சின்னான் (60), அவரது மகன்கள் கருப்புசாமி (38), ரங்கசாமி (32), செல்வராஜ் (30) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

The post பெண் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Palladam ,Jyothimani ,Ramasamy ,Kodangipalayam ,Chinnan ,
× RELATED புகையிலை பொருட்கள் பறிமுதல்