×

சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள் விருதுபெற விண்ணப்பிக்க அழைப்பு

 

பெரம்பலூர், மே 30: பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருது பெற வருகிற ஜூன் 20ம் தேதிக்குள் விண் ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஒவ் வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் பெண்கள் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2024-ம் ஆண்டிற்கு வழங்கப்பட இருக்கிறது.

இந்த விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிட மாகவும், 18 வயது மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.குறைந்தப் பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்குபெருமை சேர்க்கும் வகையிலான நட வடிக்கை, மொழி, இனம், பண்பாட்டு, கலை அறிவி யல், நிர்வாகம் போன்ற துறைகளில் மென்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவ னமாகவும் இருத்தல்வேண்டும்.

எனவே இவ்விருதுக்குத் தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணை யதளத்தில் (https://awards.tn.gov.in) வருகிற ஜூன் 20ஆம்தேதி மாலைக்குள் ஆன்லைனில் பதிவுசெய்து, பதிவு செய்த விவரத்தினை பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவல கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் அணுகி விண்ணப்பம் செய்த விவ ரத்தினை தகுந்த ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

The post சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள் விருதுபெற விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Collector ,Karpagam ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில்...