×

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மாவட்டத்தின் முக்கிய ஆறான பழையாற்றில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர்கனமழையால் மாவட்டத்தின் முக்கிய ஆறான பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உதிரப்பட்டி, பரப்புவிளை, அக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக ஆஸ்ரம பகுதியில் பழையாற்றின் குறுக்கே அமைந்துள்ள சோழன்திட்டு அணையின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளது. பழையாற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

The post கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மாவட்டத்தின் முக்கிய ஆறான பழையாற்றில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Uthripatti ,Prapuvirai ,Achara ,Chozhanthittu Dam ,Ashram ,sixth ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூரில் கயிறு, பானை விற்பனைக்கு குவிப்பு