×

குஜிலியம்பாறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

குஜிலியம்பாறை, மே 22: குஜிலியம்பாறை அருகே தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்வயரை ெதாட்ட விவசாயி மின்சாரம் தாக்கி பலியானார். குஜிலியம்பாறை அருகே ஏ.கொல்லபட்டியை சேர்ந்தவர் ராமசாமி (65) விவசாயியான இவர் ஆடுகளும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று தனது தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தில் மின்சார வயர் அறுந்து விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. மின்கசிவால் தீப்பிடித்து எரிவதை அறியாத ராமசாமி, அதனை அணைக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்ட ராமசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்ததும் குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குஜிலியம்பாறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Kujiliamparai ,Kujiliambarai ,Ramasamy ,A. Kollapatti ,
× RELATED குஜிலியம்பாறை அருகே தெருநாய்கள் கடித்து 9 செம்மறி ஆடுகள் பலி