×

சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீர்

ஓசூர், மே 22: ஓசூரில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி குளமானது. இதனால், வாகனங்களை போலீசார் மாற்று பாதையில் திருப்பி விட்டனர். ஓசூரில் நேற்று மாலை மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல மழை அதிகரித்து கனமழையாக பெய்தது. இந்த மழை 40 மில்லி மீட்டராக பதிவானது. பலத்த மழையின் காரணமாக ஓசூர் பஸ் நிலையம், பாகலூர் சர்க்கிள், ஜி.ஆர்.டி சர்க்கிள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது. மழையால், ஓசூர் ரயில் நிலையம் அருகில், ரயில்வே சுரங்கப்பாதை வெள்ளக்காடாக மாறியது. இதனால் போலீசார் அவ்வழியாக செல்ல தடை விதித்து, அனைத்து வாகனங்களையும் திருப்பி விட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் பல இடங்களில் வாகன நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர்.

The post சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீர் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Dinakaran ,
× RELATED குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்