×

குட்கா கடத்தியவர் கைது

ஒசூர், ஜூன் 2: ஓசூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு, எஸ்ஐ தனசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்றிருந்தவரை பிடித்த போலீசார், அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்தினர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட ₹8 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் செந்தில் (47) என்பதும், பெங்களூருவில் இருந்து கோவைக்கு புகையிலை பொருட்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், செந்திலை கைது செய்தனர்.

The post குட்கா கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Hosur ,SI Thanasekaran ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!