×

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகி கைது கொலை வழக்குகளில் தொடர்புடையவர் பள்ளிகொண்டா அருகே

பள்ளிகொண்டா, மே 19: பள்ளிகொண்டா அருகே கொலை வழக்குகளில் தொடர்புடைய பாஜ நிர்வாகி கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் வாலிபர் ஒருவர் அந்த வழியாக இருசக்கர வாகனம், நடந்து செல்வோர்களை மடக்கி கத்தியை காட்டி பணம் பறிப்பதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், பழனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜய்(37) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருந்த வாலிபரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பள்ளிகொண்டா கட்டுப்புடி தெருவை சேர்ந்த கிளி(எ)சதீஷ்(37) என்பது தெரியவந்தது. இவர் வேலூர் மாவட்ட பாஜ கட்சியின் இளைஞரணி மாவட்ட தலைவராக இருப்பதும் தெரிந்தது. இதனையடுத்து சதீஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைதான சதீஷ் மீது அரக்கோணம், வேலூரில் நடந்த முக்கிய கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், பல்வேறு குற்ற வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

The post கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகி கைது கொலை வழக்குகளில் தொடர்புடையவர் பள்ளிகொண்டா அருகே appeared first on Dinakaran.

Tags : BJP ,Pallikonda ,Vellore district ,Kandaneri national highway junction ,
× RELATED (வேலூர்) திருமண மண்டபத்தின்...