×

போக்சோ வழக்கில் சலவை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

 

கோவை, மே 17: கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (40). இவர் சலவை தொழில் செய்து வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி தர்மராஜ் கடைக்கு 3 வயது பெண் குழந்தை வந்துள்ளது. அப்போது தர்மராஜ் அக்குழந்தையை தன் கடைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தர்மராஜை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கிற்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தர்மராஜூற்க்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட 3 வயது சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டார்.

The post போக்சோ வழக்கில் சலவை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dharmaraj ,Bothanur ,POCSO ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...