×

ராஜீவ் காந்தி நினைவு ஜோதிக்கு உற்சாக வரவேற்பு

 

மதுக்கரை, மே 17: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி நினைவு ஜோதி பெங்களூரில் இருந்து சத்தியமங்கலம், கோவை வழியாக நேற்று மதுக்கரைக்கு வந்தது. ராஜீவ் காந்தி ஜோதி யாத்ரா கமிட்டியின் தலைவர் துரை, மாநில பொறுப்பாளர் கிஷோர் பிரசாத் ஆகியோர் தலைமையில் மதுக்கரைக்கு வந்த நினைவு ஜோதியை யாத்ரா கமிட்டியின் பொதுச்செயலாளர் பஞ்சலிங்கம் வரவேற்று பெற்று கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணை தலைவர் கந்தசாமி, கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி, ஐஎன்டியுசி சமேளன தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன், ஐஎன்டியுசி கவுன்சில் தலைவர் துளசிதாஸ், கோவை தெற்கு மாவட்ட துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், மதுக்கரை நகர தலைவர் சிவசுப்பிரமணியம், பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

The post ராஜீவ் காந்தி நினைவு ஜோதிக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Rajiv ,Gandhi ,Madhukarai ,Rajiv Gandhi ,Bangalore ,Sathyamangalam, Coimbatore ,Rajiv Gandhi Jyoti Yatra Committee ,Rajiv Gandhi Memorial Jyoti ,
× RELATED 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை...