×

ஒப்பந்த கூலி வழங்க வலியுறுத்தல் உடுமலை மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வருவோர் அவதி மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி

உடுமலை, மே 16: உடுமலையில் அனைத்து மகளிர் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் டிஎஸ்பி அலுவலகமும் உள்ளது. அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு பல்வேறு புகார்கள் அளிக்க தினசரி பலர் வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் தான் அதிகளவில் வருகின்றனர்.உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் சரகத்துக்கு உட்பட்ட பகுதிக்கு ஒரேஒரு மகளிர் காவல்நிலையம் என்பதால், தொலைதூர கிராமங்களில் இருந்தும் பெண்கள் புகார் அளிக்க இங்கு வருகின்றனர்.ஆனால் இந்த காவல்நிலையத்தில் புகார்தாரர்கள் அமர இருக்கை வசதி எதுவும் இல்லை. காவல் ஆய்வாளர் வெளியில் சென்றிருந்தால் கால்கடுக்க நின்று கொண்டிருக்கவேண்டும். இதனால் பலரும் காவல்நிலைய வளாகத்தில் தரையில் அமரும் நிலை உள்ளது. இதனால் அவதிப்படுகின்றனர்.எனவே, உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார்தாரர்கள் அமர வசதியாக இருக்கைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஒப்பந்த கூலி வழங்க வலியுறுத்தல் உடுமலை மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வருவோர் அவதி மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Udumalai Women's Police Station ,Udumalai ,women police ,DSP ,All Women Police Station ,Udumalai Police ,Dinakaran ,
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்