×

விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை, மே 14: திருவண்ணாமலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர், பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அடுத்த செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(24). இந்நிலையில், இளம் பெண் ஒருவரை இவர் காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுப்பதாக. அந்தப் பெண்ணின் தாய் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்திருந்தார்.அதன் பேரில். மணிகண்டனை விசாரணைக்காக நேற்று மாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அப்போது, அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. பின்னர், அவரை மீண்டும் அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எழுதி பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிறிது நேரம் கழித்து மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்த மணிகண்டன், தன்னுடைய செல்போனை தருமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், எறும்புகளை கொல்ல பயன்படுத்தப்படும் (எறும்பு சாக்பீஸ்) பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து உடனடியாக அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார். போலீஸ் ஸ்டேஷன் முன்பு வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி திருவண்ணாமலையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Tiruvannamalai ,Manikandan ,Chettipatti village ,
× RELATED திருவண்ணாமலை மற்றும் ஆரணி...