×

கோவை மாவட்டத்தில் 44 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம்

கோவை, மே 12: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்கள் நேற்று பிஆர்எஸ் மைதானத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், போலீஸ் துணை கமிஷனர் ரோகித் நாதன் ராஜ கோபால், போக்குவரத்து இணை கமிஷனர் சிவக்குமரன், ஆர்டிஓக்கள் சிவகுருநாதன், ஆனந்த், பாலமுருகன், சத்திய முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், வாகனங்களின் பிரேக், பாதுகாப்பு கருவிகள், வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ேசாதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் மொத்தம் 1157 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 1113 பள்ளி வாகனங்கள் தகுதி பெற்றது. ஆய்வின் போது தகுதிபெறாத சுமார் 44 பள்ளி வாகனங்கள் தகுதிச்சான்று தற்காலிக ரத்து செய்யப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத பள்ளி வாகனங்கள் குறைபாடுகளை சரி செய்து ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்பே பொது சாலையில் இயக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், தீயணைப்பு துறையின் மூலமாக ஓட்டுநர்களுக்கு தீயை எவ்வாறு அணைப்பது மற்றும் தீ அணைப்பான் எவ்வாறு பயன்படுத்தப்படுவது என செயல்முறை வகுப்பு நடத்தப்பட்டது. ஆய்வில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. மேலும் ஓட்டுநரின் உயரம், எடை, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் என உடல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில், சுமார் 887 ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து துறையினர் கூறுகையில், ‘‘ வெப் கேமரா, அவசர கால வழி இன்றி சில வாகனங்கள் இருந்தது. பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டது. சிலர் வாகனங்களை ஆய்வுக்கு கொண்டு வரவில்லை. முறையாக ஆய்வு நடத்திய பின்னரே அனுமதி பெற்று தான் வாகனங்களை இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றொரு முறை வராத வாகனங்கள் ஆய்வு நடத்தப்படும்’’ என்றனர்.

The post கோவை மாவட்டத்தில் 44 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore district ,Coimbatore ,District ,Kranthi Kumar ,Commissioner ,Rohit Nathan Raja Gopal ,Transport Co ,Dinakaran ,
× RELATED முன்னாள் படைவீரர் ‘சார்ந்தோர்...