×

தனியார் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிப்பு

சேலம், மே 12: சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த பி.என்.பட்டியில் சோயா பவுடர் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையின் செயல்பட்டால், அப்பகுதியில் காற்று மாசுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். அதன் அறிக்கை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்து, தொழிற்சாலையை மூட உத்தரவு பிறக்கப்பட்டது. இதனையடுத்து சேலம் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரின் உத்தரவுப்படி, நேற்று முன்தினம் சம்மந்தப்பட்ட மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

The post தனியார் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Mettur, Salem district ,PN Patti ,Dinakaran ,
× RELATED குவாரி குட்டையில் மூழ்கி பெண் பலி