×

மதுரவாயலில் லாரி மோதி மாணவன் பலி

பூந்தமல்லி, மே 11: மதுரவாயலில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜீவா(15). மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை சென்னை மதுரவாயல் பாலத்தின் கீழே ஜீவா மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி ஜீவா ஓட்டிச் சென்ற மொபட் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார் ஜீவாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய டிரைவரை தேடி வருகின்றனர். 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த மாணவன் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post மதுரவாயலில் லாரி மோதி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Poontamalli ,Jeeva ,Thanalakshmi Nagar, Maduravayal, Chennai ,Maduravayal Government Higher Secondary School ,Chennai ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ