×

மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு: டி.என்.பி.எஸ்.சி கோரிக்கை; உச்ச நீதிமன்றம் ஏற்பு


புதுடெல்லி: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகள் மூலம் போட்டித் தேர்வின் அடிப்படையில் நேரடியாக நியமிக்கப்படும் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் கடந்த 2003ம் ஆண்டு முதல் அரசு பணியில் உள்ளவர்களுக்கு பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கும் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டு வந்தது. இது தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘டி.என்.பி.எஸ்.சியில் மதிப்பெண் மற்றும் பணி மூப்பு தகுதியின் அடிப்படையில் தான் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நான்கு மாதத்தில் பணிகளை முடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி அறிவுறுத்தி இருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பதிலளித்த டி.என்.பி.எஸ்.சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி மற்றும் குமணன் ஆகியோர், ‘‘உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்குவது உட்பட, அதுதொடர்பான விவகாரத்தில் தேர்வு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டது. குறிப்பாக இது சுமார் ஒரு லட்சத்து 38ஆயிரம் ஊழியர்கள் தொடர்பான விவகாரம் ஆகும். இருப்பினும் தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தனர். இதையடுத்து டி.என்.பி.எஸ்.சியின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் ஆகிய அனைத்தும் முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

The post மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு: டி.என்.பி.எஸ்.சி கோரிக்கை; உச்ச நீதிமன்றம் ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Tamil Nadu ,TNPSC ,TRP ,Dinakaran ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...