×

நிஷ்கல யோகம் என்னும் புதையல் யோகம்

நிஷ்கல யோகம் என்ற புதையல் யோகம் என்பது மிகவும் சிறப்பானதாக சொல்லப் படுகிறது. இந்த யோகம் மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் பொருட்களினால் மட்டும் உண்டாகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். சில நேரங்களில், லாட்டரி சீட்டுகளின் வழியாக மிகப் பெரும் தனத்தை பெறுவதும், குதிரைப் பந்தயம், ரேஸ், ஒருவரிடம் போட்டிக்காக பணம் கட்டுவது தொடர்பாகவும், ஒரு வேலையில் திடீரென ஒரு சின்ன ஐடியாக்கள் தோன்றி, அதன் மூலம் மிகப் பெரிய வெற்றி பெற்று, அதனால் ெபரும் தனம் உண்டாவதும், நம் மூதாதையர்கள் விட்டுச் சென்ற ஒரு பொருளினால் பெரும் தனம் நமக்குக் கிடைப்பதும், அனைத்தும் புதையல் யோகம் என்ற நிஷ்கல யோகமாகச் சொல்லப்படுகிறது. உழைக்காமல் வரும் பொருள் நிலைக்காது என்ற சொலவடை உண்டு. இது அவரவரின் அனுபவத்தில் உணரப்படும். ஒவ்வொருவரும் உழைத்து பொருள் ஈட்டுவதற்காக படாதபாடு படுகிறோம். அப்படியே உழைத்தாலும், பெரும் பொருள் மற்றவர்களுக்கு போக மீதிதான் நமக்கு வருகிறது.

இந்த புதையல் யோகம் என்பது உங்களின் உழைப்பின் முழுவதும் உங்களுக்கே வந்து சேரக் கூடிய யோகம் எனவும் சொல்லலாம் அல்லது இவ்வளவு நாள் நீங்கள் உழைத்து பொருள் ஈட்டியிருந்தாலும், ஏதும் கிடைக்காமல் இருந்தாலும், இனி பெரும் பொருள் உங்களை வந்தடைவதற்கான காலம் என்றும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். நிஷ்கலம் யோகம் என்பதற்கு வரம்புகள் இல்லாத பொருள் வரவு என்றும், கொள்ளலாம். சில நேரங்களில், பெரும் பணம் வந்து சேரும்போது நோய், பிரச்னை அதோடு அவர்களுக்கு தெரியாமல் கூடவே வந்து சேர்ந்துவிடும். அதனால் கவனமாக இருக்க வேண்டும்.

புதையல் யோகம் என்பது என்ன

ஜனன ஜாதகத்தில் நான்காம் (4ஆம்) அதிபதியும், பத்தாம் அதிபதியும் (10ஆம்) இணைந்திருத்தல், நான்காம் (4ஆம்) அதிபதியும் பத்தாம் அதிபதியும் (10ஆம்) ஒன்றுக் கொன்று பார்வை பெற்றிருத்தல், நான்காம் (4ஆம்) அதிபதியும், பத்தாம் அதிபதியும் (10ஆம்) பரிவர்த்தனை பெற்றிருத்தல், புதையல் யோகம் எனச் சொல்லப்படும் நிஷ்கல யோகமாகும்.

புதையல் யோகத்தின் கால மாற்றங்கள்

பழங்காலத்தில் அதாவது, ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன், வீடு கட்டுவதற்கு நிலத்தைத்தோண்டும் போது பானைகளிலோ அல்லது தாழிகளிலோ தங்க நாணயங்களாகவோ, தங்கக் கட்டிகளாகவோ பெரும் பொருள் கிட்டியிருக்கிறது. பூமியில் இருந்து பெறப்படும் அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்ற விதி இப்பொழுதும் இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன், லாட்டரி சீட்டுகளின் மூலமாகவோ அல்லது குதிரைப் பந்தயங்களின் வாயிலாக பெரும் தனம் உண்டாயிருக்கிறது. நிகழ்காலத்தில்சிலர்ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் பொருள் ஈட்டுகின்றனர்.இந்த மாதிரியான தன யோகங்கள் காலத்திற்கு தகுந்தவாறு மாறுபடுகின்றது. ஆனால், இது அனைவருக்கும் கிட்டுவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது உழைக்காமல் வருகின்ற தனத்தை சொல்கின்றது. உழைப்பால் பெறப்படும் தன யோகமே என்றும் நிலை பெறும் அமைப்பாகும். சிலர், பல தொழில் செய்து எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருப்பர்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மறுபடியும் தொழில் தொடங்குவர். ஆனால், வளர்ச்சி அபரிமிதமாக ஏற்பட்டு அவர்களுக்கு பெரும் தனயோகம் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தனயோகமே நிஷ்கல யோகமாகும். கேசினோவில் வெற்றி பெறுவதும், ஷேர் மார்கெட்டில் குறைந்த விலையுடைய ஒரு ஷேர் மிகப் பெரிய விலைக்கு ஏற்றமடைவதும், கிரிப்டோகரன்சி என்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு பெரும் தொகை பெறுவதும் நடைபெறுவதையும் நாம் கண்கூடாக காண்கிறோம். சினிமாவிலும் இந்த யோகம் ஏற்படுகின்றது. சாதாரணமாக எடுக்கப்படும் புது இயக்குனர்களின் படங்கள் திடீரென மிகப் பெரிய வெற்றி பெற்று ஏராளமான தனவரவுகளுக்கான வாய்ப்புகள் உண்டாவதும் இதன்
அடிப்படையில்தான்.சிலருக்கு வேலையிலோ அல்லது அரசியலிலோ பெரிய பதவிகள் கிடைக்கும். இதுவும் ஒரு புதையல் யோகமாகும். இது நீடிக்கும் என்று சிலர் நினைப்பர். சில நேரங்களில் நீண்ட காலம் யோகமுடையதாகவும், சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் யோகம் இல்லாததாகவும் மாறும் அமைப்பை உடையதாகும்.

லக்னங்கள் அடிப்படையில் புதையல் யோகம் எப்படி ஏற்படும்?

மேஷம், துலாம் சர லக்னங்களுக்கு சந்திரன், சனி கிரகங்கள் புதையல் யோகத்தை ஏற்படுத்தும். ரிஷபம், விருச்சிகம் ஸ்திர லக்னங்களுக்கு சூரியன், சனி கிரகங்கள் புதையல் யோகத்தை ஏற்படுத்தும். மிதுனம், கன்னி, மீனம், தனுசு ஆகிய உபயலக்னங்களுக்கு வியாழன், புதன் கிரகங்கள் புதையல் யோகத்தை ஏற்படுத்தும். கடகம், மகரம் சர லக்னத்திற்கும் சிம்மம், கும்பம் ஸ்திர லக்னத்திற்கும் செவ்வாய், சுக்கிரன் கிரகங்கள் புதையல் யோகத்தை ஏற்படுத்தும். இந்த ஏழு கிரகங்கள் மட்டும் சாயா கிரகங்களைத் தவிர புதையல் யோகத்தை தருகின்றன. நான்காம், பத்தாம் இடம் தொடர்பு ஏற்படுவதினால் வீட்டின் நிலத்தின் மூலமாகவோ அல்லது தொழில் / உத்தியோகத்தின் மூலமாகவோ இந்த புதையல் யோகம் ஏற்படலாம்.

புதையல் யோகம் எந்த காலகட்டத்தில் ஏற்படும்?

கோட்சாரத்தில் (4ஆம் அதிபதி, 10ஆம் அதிபதி) நான்கு, பத்துக்குடையவர்கள் சேரும் காலத்திலும், மேலும் (4ஆம் அதிபதி, 10ஆம் அதிபதி) நான்கு, பத்துக்குடையவர்கள் ஒருவரையொருவர் பார்வையிடும் காலத்திலும், இந்த நிஷ்கல யோகம் என்ற புதையல் யோகம் ஏற்படும். நான்கு, பத்துக்குடையவர்கள் (4ஆம் அதிபதி, 10ஆம் அதிபதி) திசா, புத்தி காலங்களிலும் இந்த புதையல் யோகம் ஏற்படும். இக்கால கட்டத்தில், அசுப கிரகங்கள் இணைந்து தடை ஏற்படுத்தினால், சிறிய அளவில் வேலை செய்யும். இந்த நான்காம், பத்தாம் அதிபதிகள் மறைவிடத்தில் இருந்தாலும், பெரிய அளவில் ஏற்படாது. கேந்திரங்களில் இருந்தால் சிறப்பான பலனைத் தரும்.

எச்சரிக்கை தேவை

சர லக்னங்களான மேஷம், மகரத்திற்கு 10ம் அதிபதியும் 4ம் அதிபதியும் பாதகாதிபதியாக வருவதால், மிகவும் எச்சரிக்கை தேவை. பெரும் தனத்தை ெகாடுத்த யோகம் அதனுடன் பெரும் நோயையோ அல்லது கண்டத்தையோ சிலருக்கு கொடுத்துவிடும் என்பது முன்னோர்களின் அனுபவ உண்மை.

The post நிஷ்கல யோகம் என்னும் புதையல் யோகம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED இயற்கை வடித்த லிங்கம்