×

க.பரமத்தி அருகே மது பாட்டில் பதுக்கிய பெண் உள்பட 2 பேர் கைது

க.பரமத்தி,மே3: க.பரமத்தி அருகே வெவ்வேறு பகுதிகளில் மது பாட்டில் பதுக்கிய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். க.பரமத்தி ஒன்றிய பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சின்னதாராபுரம் பகுதி போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.சின்னதாராபுரம் அடுத்த தன்னாசியப்பன் கோயில் தெரு பகுதியில் சின்னதாராபுரம் போலீசார் நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி (54) என்பவர் அப்பகுதி மது விற்பனைக்காக 7 பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட்டது. இதே போல சின்னதாராபுரம் பனையம்பாளையம் பகுதியில் நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி மகேஸ்வரிசக்தி (45) அப்பகுதியிலேயே 5பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட்டது.மேற்கண்டவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

The post க.பரமத்தி அருகே மது பாட்டில் பதுக்கிய பெண் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Paramathi ,K. Paramathi ,Chinnadharapuram ,
× RELATED நிலத்தடி நீர் ஆதாரம் வற்றிப் போனதால் அழிக்கப்பட்டு வரும் தென்னை மரங்கள்