×

விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை கொன்று டாக்டர் தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

திருமலை: விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை கொன்று டாக்டர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடா நகரில் உள்ள படமடா பகுதியில் பிரபல எலும்பு மூட்டு டாக்டர் டி.ஸ்ரீனிவாஸ்(40), அவரது மனைவி உஷா (38), இரண்டு குழந்தைகள் ஷைலஜா(9), ஹான்(8), தாய் ரமணம்மா(65) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டில் பணி புரியும் பெண் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பால்கனியில் மருத்துவர் சீனிவாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது அனைவரும் இறந்து கிடப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். போலீசார் தடவியியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிவாஸின் மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் தாய் ஆகியோர் டாக்டர்கள் பயன்படுத்தும் கத்தியை கொண்டு அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்கள் வீட்டிற்குள் காணப்பட்டதால் அவர்களை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். னிவாஸ் சமீபத்தில் தனி மருத்துவமனையை தொடங்கினார். இதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் அதனை விற்கப்பட்டதாகவும் அப்போதிருந்து, அவர்கள் கடன் சிக்கலில் உள்ளதும் தெரிய வந்தது.

The post விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை கொன்று டாக்டர் தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vijayawada city ,Thirumalai ,Vijayawada ,AP ,D. ,R. ,Patamada ,Dr. ,D. Srinivas ,
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு