×

இலவச பேருந்து பயண திட்டம் மூலம் பயனடைந்த மாணவி: டிக்கெட்களை மாலையாக்கி சித்தராமையாவுக்கு அணிவித்து நன்றி

கர்நாடகா: கர்நாடகாவில் இலவச பேருந்து பயணத்தின் மூலம் கிடைத்த டிக்கெட்களை சேகரித்து வைத்து மாலையாக வடிவமைத்து மாணவி ஒருவர் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அணிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டை பின்பற்றி இலவச மகளிர் பேருந்து திட்டத்தை முதலமைச்சர் சித்தராமையா அமல்படுத்தினார். இது கர்நாடக பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில் ஹசன் மாவட்டம் அரிசிகரை பகுதியை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ என்பவர் சித்தராமையா தலைமையிலான அரசு அறிவித்த மகளிர் இலவச பேருந்து திட்டம் மூலம் பயனடைந்திருக்கிறார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது இலவச பேருந்து பயண டிக்கெட்டுகளை எடுத்துவந்த அவர் அழகிய மாலையாக வடிவமைத்து முதலமைச்சரிடம் வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தினார். மாலையை இன்முகத்துடன் ஏற்று கொண்ட முதலமைச்சர் அது தொடர்பான விடியோவை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்து இலவச திட்டங்களை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு சிறந்த பாடம் என குறிப்பிட்டுள்ளார்.

The post இலவச பேருந்து பயண திட்டம் மூலம் பயனடைந்த மாணவி: டிக்கெட்களை மாலையாக்கி சித்தராமையாவுக்கு அணிவித்து நன்றி appeared first on Dinakaran.

Tags : Sidharamaya ,Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Congress ,Tamil Nadu ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...