×

தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையார் இணைந்த முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக கடந்த 11.9.1995ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. ஆனால் அது தற்போது வரையில் நடைமுறைப்படுத்தாமல் இருந்து வருகிறது. இதற்கு எதிராக பி.ஸ்டாலின் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை,‘‘இந்த விவகாரத்தில் அரசுக்கு நீதிமன்றம் எந்தவித உத்தரவையும் நேரடியாக பிறப்பிக்க முடியாது என்று கூறி அவரது மனுவை கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் பி.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,‘‘தேவர் சமுதாய அரசாணையை அமல்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

The post தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Tamil Nadu government ,New Delhi ,Government of Tamil Nadu ,Kallar ,Maravar ,Agamudayar ,Devar ,Tamil Nadu ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு