×

வெறுப்பை பரப்பும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு

டெல்லி: வெறுப்பை பரப்பும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். ராஜஸ்தான் பிரச்சாரக் கூட்டத்தில் ஒரு சமூகத்துக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மோடியின் பேச்சுக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் முறையீடு செய்துள்ளனர்.

The post வெறுப்பை பரப்பும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு appeared first on Dinakaran.

Tags : Congress ,Election Commission ,Modi ,Delhi ,Abhishek Manu Singhvi ,Salman Khurshid ,Gurdeep Satpal ,
× RELATED மதரீதியான பிளவை ஏற்படுத்த மோடி...