மும்பை: மும்பையில் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன்பு அதிகாலையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.55 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் 4 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்மநபர்களை பிடிக்க போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சல்மான் கான் வீட்டின் முன்பு நடந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் இல்லை என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
The post மும்பையில் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன்பு அதிகாலையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டால் பதற்றம் appeared first on Dinakaran.