×

தாய் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது நின்றிருந்த காருக்குள் ஏறியதும் ஆட்டோ லாக் ஆனதால் மூச்சுத் திணறி 6 வயது சிறுவன் பலி

*போலீஸ் விசாரணை

திருமலை : தாய் அருகே விளையாடி கொண்டிருந்தபோது காரில் மூச்சுத் திணறி 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் போதன் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா. இவர் ராகாசிபேட்டை ஆஞ்சநேய சுவாமி கோயில் வளாகத்தில் கூலி வேலைக்கு நேற்று சென்றார். வேலைக்கு செல்லுபோது தனது 6 வயது மகன் ராகாவை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் ரேணுகா வேலை செய்து கொண்டிருந்த போது மகன் ராகவா அருகில் விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென சிறுவன் காணாமல் போனார். இதனால் ரேணுகா உடன் பணி புரிந்த ஊழியர்களுடன் சேர்ந்து பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இறுதியாக போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து ராகாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அங்கிருந்த காரின் அருகே சிலர் சென்று பார்த்தபோது அதில் ராகவா இருப்பது தெரியவந்தது. உடனே காரின் உரிமையாளரை வரவழைத்து ராகவாவை காரில் இருந்து இறக்கினர். ஆனால் ராகவா முச்சு பேச்சு இல்லாமல் இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ராகவா விளையாடிக்கொண்டே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளான். ராகவா காரில் ஏறியதும் கதவு ஆட்டோ லாக் ஆகி உள்ளது. இதனால் ராகவா காருக்குள் சிக்கி கொண்டதால் சுவாசம் கிடைக்காமல் உடல் சேர்வு ஏற்பட்டு மூச்சு விட முடியாமல் காரிலேயே உயிரிழந்துள்ளான் என்பது தெரியவந்தது. இதனால் கண் எதிரே விளையாடிக் கொண்டிருந்த மகன் உயிரிழந்து விட்டதாக கதறினர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்தனர். காரின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தாய் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது நின்றிருந்த காருக்குள் ஏறியதும் ஆட்டோ லாக் ஆனதால் மூச்சுத் திணறி 6 வயது சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Renuka ,Bothan, Nizamabad District, Telangana ,
× RELATED காருக்கு இஎம்ஐ செலுத்த முடியாததால்...