×

100% சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு ஓவியம்

 

மதுரை, ஏப். 3: நாடாளுமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி தேர்தல் விழிப்புணர்வு ஓவியத்தை காட்சிப்படுத்தினர். வரும் ஏப்.19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தரப்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் நேற்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான சங்கீதா தலைமையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிர் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒன்று கூடி வட்டமாக நின்று பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு ஓவியத்தை காட்சியப்படுத்தினர். இந்த பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு ஓவியத்தை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா, டிஆர்ஒ சக்திவேல் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post 100% சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு ஓவியம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...