×

பணப்பட்டுவாடா புகார்: சென்னையில் ஓட்டேரி உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!!

சென்னை: சென்னையில் ஓட்டேரி உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி வருமான வரித்துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று துவங்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் கிடைக்கப்பெற்றது. அதில், வடசென்னைக்கு உட்பட்ட நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் பணப்பட்டுவாடா நடக்க இருப்பதாகவும், அதற்கான வருமானங்கள் ஆங்காங்கே சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இதன் அடிப்படையில் இன்று காலை முதல் அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொள்ள ஓட்டேரி உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு விரைந்தனர்.

பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த தகவலின் பேரில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை ஏழுகிணறு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனை நடைபெற்று வருகிறது. சர்க்கரை தெருவில் இருக்கக்கூடிய இன்துராம் சௌத்ரி என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சோதனையில் ஆவணங்கள், பணம், இலவச பொருட்கள், வெள்ளி பொருட்கள் ஆகியவை கண்டறியும் பட்சத்தில் அவை கைப்பற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பணப்பட்டுவாடா புகார்: சென்னையில் ஓட்டேரி உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Panelwada ,Oteri ,Chennai ,Income Tax Department Office ,North Chennai ,
× RELATED சென்னையில் 5 இடங்களில் வருமானவரி சோதனை