×

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கட்சி மாற ரூ.5 கோடி பேரம் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் சேவக் சிங் மீது வழக்கு..!!

டெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜிந்தர் பால் கவுர், கட்சி மாற ரூ.5 கோடி பேரம் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் சேவக் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானா தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜிந்தர் பால் கவுர் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுவீடனைச் சேர்ந்த தொலைபேசி எண்ணில் இருந்து ராஜிந்தர் பால் கவுரை தொடர்புகொண்டு பேரம் பேசியுள்ளார். பா.ஜ.க.வில் சேர்வதற்கு ரூ.5 கோடி கொடுப்பதுடன் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என ஆசைவார்த்தை கூறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் உயர் தலைவர்களுடன் சந்திக்க தான் ஏற்பாடு செய்வதாக சேவக் சிங் கூறியதாகவும் மனுவில் எம்.எல்.ஏ. புகார் அளித்திருக்கிறார். தொலைபேசியில் பேசியர் தனது பெயர் சேவக் சிங் என்றும் டெல்லியில் வசிப்பதாகவும் தெரிவித்திருந்தார். ராஜிந்தர் பால் கவுர் அளித்த புகாரின்பேரில் பஞ்சாப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்களவை தேர்தல் முடியும் வரை தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜிந்தர் பால் கவுர் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கட்சி மாற ரூ.5 கோடி பேரம் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் சேவக் சிங் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Atmi M. L. A. Bargain ,J. K. SUE ,Delhi ,Atmi ,M. L. A. Rajinder Pal Kaur ,J. K. ,Punjab ,State Ludhiana South Constituency ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...