×

கர்நாடகா பா.ஜ பெண் தலைவர் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்

பெங்களூரு: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், கர்நாடகா மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜவிலிருந்து விலகிய தேஜஸ்வினி கவுடா, நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2004 முதல் 2009 வரை கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக இருந்த தேஜஸ்வினி கவுடா, 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜவில் இணைந்தார். 2014ம் ஆண்டு பாஜவில் இணைந்த பிறகு, 2018ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். பின்னர் மேலவை உறுப்பினராக தேர்வானார். 10 ஆண்டுகள் பாஜவில் இருந்த தேஜஸ்வினி கவுடா, தற்போது பாஜவிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

The post கர்நாடகா பா.ஜ பெண் தலைவர் மீண்டும் காங்கிரசில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,BJP ,Congress ,Bengaluru ,Lok Sabha ,Tejaswini Gowda ,Karnataka Upper House ,Congress party ,Tejaswini ,Dinakaran ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி