×

நடந்து சென்ற பெண் டூவீலர் மோதி காயம்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 28: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாலை ஓரமாக நடந்து சென்ற பெண் மீது டூவீலர் மோதி காயமடைந்தார். தேவிபட்டிணம் அருகே நாரணமங்கலம் வைகை பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி பஞ்சவர்ணம்(52). இவர் தனது உறவினர்களுடன், கொல்லங்குடி காளி கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பாதயாத்திரையாக நடந்து சென்றார். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மங்களம் விலக்கு ரோடு அருகே சாலையின் ஓரமாக சென்றபோது பஞ்சவர்ணத்தின் மீது டூவீலர் மோதியது. இதில் பஞ்சவர்ணம் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார், டூவீலரை ஓட்டி வந்த பெருமாள்மடையை சேர்ந்த பாக்கியம் மகன் ராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நடந்து சென்ற பெண் டூவீலர் மோதி காயம் appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Selvam ,Panchavarnam ,Naranamangalam Vaigai ,Devipattinam ,Kollangudi Kali ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு