×

பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

பள்ளிப்பட்டு, ஏப். 28: பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வீசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை நடுத்தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் மோகனா(24). பட்டதாரியான இவருக்கு அதே ஊர் காஞ்சிபுரம் தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மகன் செல்வகுமார்(28) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மூன்று மாதங்கள் மட்டும் கணவருடன் குடும்பம் நடத்திய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் பொதட்டூர்பேட்டையில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மோகனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொதட்டூர்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Bodaturpet ,Pothatturpet ,Balakrishnan ,Mohana ,Pothatturpet Nadutheru ,Pallipattu ,Tiruvallur ,
× RELATED பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு