சிவகாசி மார்ச் 22:சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் விவேகானந்தர் காலனி உள்ளது. இந்த காலனியில் புதிய சாலை அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். அதனை தொடர்ந்து சிவகாசி சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கியது.
இந்நிலையில் சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. பணிகளை தொடங்காததால் நேற்று காலை அப்பகுதி மக்கள் சிவகாசி – செங்கமலநாச்சியார்புரம் மெயின் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் உள்ள ரோட்டை முழுமையாக சீரமைத்து தரும்படி கோரிக்கை வைத்தனர்.
இதை தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையை முழுமையாக அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொது மக்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post சிவகாசி அருகே சாலை அமைக்க கோரி மக்கள் மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.