×

தீபம் ஏற்றும் முறையும் அதன் பலன்களும்!

நாம் நாள்தோறும் காலை மற்றும் மாலை இருவேளையும் பூஜை அறையில் தீபம் ஏற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். தீபங்கள் ஏற்றுவதால் ஏற்படும் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

*தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் நன்மதிப்பும் கிடைக்கும்.

*மேற்குத் திசையில் உள்ள முகத்தை ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும், கடன் தொல்லைகள் விலகும்.

*சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும். தென் திசையில் ஒருபோதும் விளக்கு ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

*ஒவ்வொரு திசைக்கும் பலன்கள் என்பது போல் எந்த திரி வகையினை பயன்படுத்தினால், குறிப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

*சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டது பஞ்சுத்திரி.

*முற்பிறவியின் பாவங்களை அகற்றி செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள தாமரைத் தண்டு திரியில் விளக்கேற்றலாம்.

*மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி பயன்படுத்தலாம்.

*செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத்திரி. முழுமுதற் கடவுளான கணேசப்பெருமானுக்கும் உகந்தது.

* தம்பதிகள் மனமொத்து வாழவும் – மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரிபோட்டு விளக்கேற்ற வேண்டும்.

*திரியுடன்எண்ணையிட்டால் தானே தீபம் எரியும்? அதற்கான பலன்களையும் பார்க்கலாம். நாம் விளக்கேற்றும்போது அதில் விடும் எண்ணையினால் பலன்கள் நேரெதிராகவும் மாற வாய்ப்புண்டு. இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று.

*கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

*கணவன்-மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.

* அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற ஆமணக்கு எண்ணை தீபம் ஏற்றலாம்.

* எள் எண்ணை (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது.

*மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணை கொண்டு தீபமேற்ற வேண்டும்.

*செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றலாம்.

*மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக் கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண்ணைகளையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

*கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் தீபம் ஏற்றக்கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.

தொகுப்பு: பிரியா மோகன்

The post தீபம் ஏற்றும் முறையும் அதன் பலன்களும்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…