×

டூவீலர் மோதி பெண் பலி

 

கிருஷ்ணகிரி, மார்ச் 19: கிருஷ்ணகிரி அருகே, பாலிகானூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி திம்மி(45). இவர் கடந்த 16ம் தேதி, கிருஷ்ணகிரிக்கு வந்தார். அப்போது, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றார். அந்த சமயத்தில் அவ்வழியாக வேகமாக வந்த டூவீலர், எதிர்பாராத விதமாக திம்மி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று, திம்மியின் உடலை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர் மோதி பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Arumugam ,Thimmi ,Balikanur ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்