×

வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு

விருதுநகர், மார்ச் 17: விருதுநகர் அருகே ஆமத்தூரை சேர்ந்த சேதுராஜ்(23). இவர் தந்தையின் டீக்கடையில் தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், வீட்டு வாசலில் துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவதும், கழுவிய பாத்திரங்களை சேதுராஜ் வீட்டு வாசலில் வைத்து இடையூறு செய்து வந்துள்ளார்.

இதை தட்டிக் கேட்டதுடன் வாசலில் வைத்த பாத்திரத்தை சேதுராஜ் தூக்கி எரிந்துள்ளார். அங்கு வந்த அழகர்சாமி, பாலமுருகன், விஸ்வநாதன், ஜெயபிரகாஷ் ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கி காயப்படுத்தி உள்ளனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சேதுராஜ் ஆமத்தூர் போலீசில் அளித்த புகாரில் அழகர்சாமி, பாலமுருகன், விஸ்வநாதன், ஜெயப்பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Sethuraj ,Amattur ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...