×

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம்

அலங்காநல்லூர், மார்ச் 9: அலங்காநல்லூர் அருகே இடையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் ஜெசிந்தாஅ ன்புமொழி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் விக்டோரியா ராணி, ஆசிரியர் ஸ்டாலின் ராஜகுமார் முன்னிலை வகித்தனர். இதில் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளை சேர்க்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை, மதியம் வழங்கப்படும் சத்தான உணவு, இலவச சீருடை, பாட புத்தகம், உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

The post அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Alankanallur ,Idiapatti Panchayat ,Union Primary School ,District Education Officer ,Jesintha Nbumozhi ,Headmaster ,Victoria Rani ,Stalin ,Dinakaran ,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை