கோவை, மார்ச் 8: கோவை மேற்கு மண்டல திமுக வர்த்தகர் அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, கோவையில் கலை இரவு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் காளப்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் தலைமை தாங்கினார். கோவை தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் கண்ணன், கோவை வடக்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வர்த்தக அணி மாநில இணை செயலாளர் முருகவேல் வரவேற்றார். இதில், திமுக வர்த்தகர் அணி மாநில செயலாளர் காசி முத்துமாணிக்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டத்தில், மேற்கு மண்டல திமுக வர்த்தகர் அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, கோவை அவினாசி ரோடு இந்துஸ்தான் கலைக்கல்லூரி வளாகத்தில் வருகிற 16ம்தேதி (சனிக்கிழமை) கலை இரவு நிகழ்ச்சி நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு, நீலகிரி, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, சேலம் மத்தியம், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திமுக வர்த்தக அணி அமைப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில், மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் தென்னவர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.
The post கோவை கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி கோவையில் மார்ச் 16-ல் கலை இரவு நிகழ்ச்சி appeared first on Dinakaran.