×

மன்னார்குடியில் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக தவறான தகவலை பதிவிட்டு வதந்தி பரப்பிய டிராக்டர் ஓட்டுநர் கைது..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் குழந்தை கடத்தல் என வதந்தி பரப்பிய நகராட்சி டிராக்டர் ஓட்டுநர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். குழந்தை கடத்தல் என எக்ஸ் வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் நகராட்சி டிராக்டர் ஓட்டுநர் சதீஷ்குமாரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய் செய்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

The post மன்னார்குடியில் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக தவறான தகவலை பதிவிட்டு வதந்தி பரப்பிய டிராக்டர் ஓட்டுநர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Tiruvarur ,Satish Kumar ,Mannargudi, Tiruvarur district ,
× RELATED மின்கம்பத்தில் பைக் மோதி 2 நண்பர்கள் பரிதாப பலி