×

மின்கம்பத்தில் பைக் மோதி 2 நண்பர்கள் பரிதாப பலி

*மன்னார்குடியில் சோகம்

மன்னார்குடி : மன்னார்குடியில் மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் 2 நண்பர்கள் பலியாகினர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த காரிக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் தேவேந்திரன் (34), சதீஷ்குமார் (37). இருவரும் நண்பர்கள். நேற்றுமுன்தினம் சதீஷ்குமார் மகனுக்கு பிறந்த நாள் என்பதால், மன்னார்குடிக்கு கேக் வாங்குவதற்காக காரிக்கோட்டையில் இருந்து நண்பர் தேவேந்திரனுடன் சதீஷ்குமார் பைக்கில் சென்றார். கேக் வாங்கி விட்டு மீண்டும் காரிக்கோட்டைக்கு திரும்பினர். பைக்கை தேவேந்திரன் ஓட்டினார்.

அப்போது மேலவாசல் எம்ஜிஆர் சிலை அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் பைக் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே தேவேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ்குமார் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த டவுன் எஸ்ஐ முருகன், எஸ்எஸ்ஐ செல்வ நாயகம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தேவேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாருக்கு அதே மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மன்னார்குடி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்கம்பத்தில் பைக் மோதி 2 நண்பர்கள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Mannargudi Mannargudi ,Mannargudi ,Devendran ,Satish Kumar ,Karikotta Ambedkar Nagar ,Tiruvarur district ,Satishkumar ,
× RELATED ஒரே நாளில் 89 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை